சூடான் நாட்டில் ராணுவம் மற்றும் துணை ராணுவ படையினரிடையே நீண்டகாலமாக கடும் மோதல் ஏற்பட்டு வருவதால் லட்சக்கணக்கானோர் பாதிக்கப்பட்டு வருகின்றனர். அதன்படி இதுவரை 9000 பேர் உயிரிழந்தும், 60 லட்சம் பேர் புலம்பெயர்ந்த உள்ளதாகவும் ஐ,நா. அமைப்பு தெரிவித்துள்ளது. மேலும் மற்ற நாடுகளிடையே 2.5 கோடி பேர் உதவி வேண்டி நிற்பதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
கடந்த இரண்டு வாரங்களில் மட்டும் சூடானில் 3 குழந்தைகள் உள்பட 75 பேர் மோதலால் உயிரிழந்துள்ளனர். 2200 பேர் நாட்டின் உள்ளேயும், வெளியேயும் புலம்பெயர்ந்துள்ளதாக ‘Save the Children’ என்ற சர்வதேச தொண்டு அமைப்பு அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது. இந்த அறிக்கை உலக நாடுகளிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.