இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையில் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் இந்திய வீரர் கே.எல்.ராகுல் காயம் காரணமாக பங்கேற்காமல் உள்ளார். இவருக்கு கடந்த 2023 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதுகில் காயம் ஏற்பட்டது. இதன் காரணமாக ஐபிஎல் தொடரிலும் ஒரு சில போட்டிகளை தவிர பெரிதளவு விளையாடவில்லை. அதன்பிறகு காயத்தில் இருந்து குணமாகி விளையாட ஆரம்பித்தார்.
தற்போது மீண்டும் காயத்தால் அவதி பட்டு வருகிறார். இப்படி காயத்துக்கு மேல் காயத்தை சந்திக்கும் இவர் இந்திய அணியில் விளையாட வாய்ப்பு கிடைத்தும் காயம் காரணமாக விளையாடாமல் இருப்பது கிரிக்கெட் ரசிகர்களை தாண்டி ஒவ்வொரு மக்களுக்குமே சற்று வருத்தத்தை அளிக்கிறது. எதுவாக இருந்தாலும் இவர் காயத்திலிருந்து மீண்டு வந்து எதிர்வரும் ஐபிஎல் தொடரில் கம் பேக் கொடுப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.