ரூ.5 லட்சம் முதலீடு செஞ்சா ரூ.2 லட்சம் நிலையான வட்டி? அஞ்சலகத்தின் அருமையான திட்டம்., மூத்த குடிமக்களுக்கு ஹேப்பி!!!

0
ரூ.5 லட்சம் முதலீடு செஞ்சா ரூ.2 லட்சம் நிலையான வட்டி? அஞ்சலகத்தின் அருமையான திட்டம்., மூத்த குடிமக்களுக்கு ஹேப்பி!!!

மூத்த குடிமக்களின் ஓய்வு கால நலன் கருதி பல்வேறு திட்டங்கள் இருந்தாலும், அதிக லாபம் தரக்கூடிய முதலீடு திட்டத்தை அஞ்சல் அலுவலகம் அறிமுகம் செய்துள்ளது. மூத்த குடிமக்களுக்கான அஞ்சலக சேமிப்பு எனும் திட்டத்தில் முதலீடு செய்யும் தொகைக்கு ஆண்டுதோறும் ஜனவரி, ஏப்ரல், ஜூலை, அக்டோபர் ஆகிய மாதங்களில் 8.2 % வட்டி கணக்கிடப்பட்டு வரவு வைக்கப்படுகிறது. ஐந்து ஆண்டுகள் முதிர்வு காலம் கொண்ட இத்திட்டத்தில், ரூ.1,000 முதல் ரூ.30 லட்சம் வரை முதலீடு செய்யலாம்.

கே எல் ராகுலும் அவரின் காயமும்..  கிரிக்கெட் வாழ்க்கை முடிவுக்கு வருகிறதா??

இத்திட்டத்தில் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள், 55 முதல் 60 வயதுக்குள் இருக்கும் அரசு ஓய்வூதியதாரர்கள், 50 முதல் 60 வயதுக்குள் இருக்கும் பாதுகாப்பு துறை ஊழியர்கள் முதலீடு செய்யலாம். உதாரணமாக ரூ.5 லட்சம் முதலீடு செய்தால், ஆண்டுக்கு ரூ.41,000 வட்டி என முதிர்வு காலத்தில் 2 லட்சத்து 5 ஆயிரம் ரூபாய் வட்டி கிடைக்கும். ஆர்வமுள்ளவர்கள் அருகாமையில் உள்ள அஞ்சல் அலுவலகத்திற்கு நேரிலோ அல்லது இந்தியா போஸ்ட் இணையதளத்திலோ சேமிப்பு கணக்கை தொடங்கலாம்.

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here