இந்திய வீரர் ராகுலின் பார்ம் குறித்து யாரும் விமர்சனம் செய்ய வேண்டாம் என முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர் தெரிவித்துள்ளார்.
லோகேஷ் ராகுல்
இந்திய அணியில் தொடக்க வீரராக களமிறங்கும் KL ராகுலுக்கு அண்மையில் கொரோனா தொற்று உறுதியாகியதால் ஓய்வில் இருந்தார். இதன் காரணமாக எந்த சர்வதேச போட்டியிலும் விளையாடாமல் இருந்த ராகுல் தற்போது நீண்ட நாட்களுக்கு பிறகு ஆஸ்திரேலியாவுக்கு எதிரான T20 போட்டியில் களமிறங்கினார். இதனால் இவரது பார்ம் எப்படி இருக்க போகிறது என பலரும் எதிர்பார்த்தனர்.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
அதன்படி ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் போட்டியில் 55 ரன்கள் விளாசி தனது பார்மை நிரூபித்தார். ஆனால் 2 வது மற்றும் 3 வது போட்டியில் ஒற்றை இலக்கங்களில் ஆட்டமிழந்து அதிர்ச்சி கொடுத்தார். மேலும் இவர் T20 உலக கோப்பை தொடருக்கான அணியிலும் இடம் பிடித்துள்ளார்.
ஆனால் இவரது பார்ம் தற்போது கேள்விக்குறியாக உள்ளது. இதனால் இவர் உலக கோப்பை தொடரில் எப்படி விளையாடுவார் என பலரும் விமர்சனங்களை கூறி வருகின்றனர். இந்நிலையில் இந்திய அணியின் முன்னாள் வீரரான சுனில் கவாஸ்கர், ராகுலை விமர்சனம் செய்ய வேண்டாம் என கூறியுள்ளார். மேலும் இவர் உலக கோப்பை போட்டியில் பெரிய ஷாட்கள் ஆடி அதிக ரன்கள் குவிப்பார் எனவும் நம்பிக்கை அளித்துள்ளார்.