நாடு முழுவதும் ரேஷன் கடைகள் மூலம் குடும்ப அட்டைதாரர்களுக்கு மலிவு விலையில் அத்தியாவசியப் பொருட்களை மத்திய மாநில அரசுகள் வழங்கி வருகிறது. இப்படி மாதந்தோறும் மாநில அரசுகளுக்கு வழங்கி வரும் மண்ணெண்ணெய் அளவை குறைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
அதன்படி தமிழ்நாட்டின் மொத்த தேவையில் 7 சதவிகிதம் மட்டுமே இம்மாதம் (ஏப்ரல்) மத்திய அரசு வழங்கியுள்ளது. இதன் காரணமாக நுகர்வோர்களுக்கு விநியோகிக்கப்படும் மண்ணெண்ணெய் அளவு திடீரென குறைக்கப்பட்டதால் பல்வேறு பகுதிகளிலும் ரேஷன் கடை ஊழியர்களுக்கு பிரச்சினைகள் உருவாகி வருகிறது.
மாணவர்களுக்கு ஷாக் நியூஸ்.., தமிழக பள்ளிகள் திறப்பு எப்போது? வெளியான அறிவிப்பு!!
இதனை தடுக்க மாவட்ட வாரியாக விநியோகிக்க கூடிய மண்ணெண்ணெய் அளவு குறித்து வட்டார வழங்கல் அலுவலர்கள் விளம்பரப்படுத்த வேண்டும் என திருவாரூர் மாவட்ட வழங்கல் அலுவலர் உத்தரவிட்டுள்ளார்.