கொரோனாவை தொடர்ந்து இந்தியாவில் வேகமெடுக்கும் புதிய நோய் – சுகாதாரத்துறை அதிரடி நடவடிக்கை!!

0
நாளுக்கு நாள் கூடும் கொரோனா பாதிப்பு.. நேற்று ஒரே நாளில் 20 ஆயிரத்தை கடந்த பாதிப்பு எண்ணிக்கை!

கேரளாவில் அதிரப்பள்ளி என்ற வனப்பகுதியில், ஆந்த்ராக்ஸ் என்ற புதிய வகை நோயால் காட்டுப்பன்றிகள் மர்மமான முறையில் உயிரிழந்திருப்பதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

சுகாதாரத்துறை தகவல்:

உலகம் முழுவதும் கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா வைரஸ் பரவல், கொடூரமான பாதிப்புகளை நிகழ்த்தி வருகிறது. இங்கிலாந்து, பிரிட்டன், அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் இன்னும் வைரஸ் பரவல் குறைந்த பாடில்லை. அதுவும் இந்த வைரஸின் பிறப்பிடமான சீனாவில், தொடர்ந்து வைரஸ் அசுர வேகத்தில் பரவி வருகிறது.

கடந்த சில தினங்களாக இந்தியாவில் இந்த பாதிப்பு, கட்டுக்குள் இருந்து வந்த நிலையில் தற்போது மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது. இந்த பரவலின் தாக்கமே இன்னும் முடிவுக்கு வராத நிலையில், கேரள மாநிலத்தில் புதிதாக ஒரு நோய் பரவி வருகிறது. அதாவது, கேரளா அதிரப்பள்ளி வனப் பகுதியில், ஆந்த்ராக்ஸ் நோயால் காட்டுப் பன்றிகள் மர்மமான முறையில் உயிரிலிருந்து கிடந்துள்ளது.

இந்த நோய் பிற காட்டு விலங்குகளுக்கு பரவாமல் தடுக்க, நடவடிக்கை எடுக்குமாறு மாநில சுகாதாரத்துறை, அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளது. மாநிலத்தில் திடீரென பரவும் இந்த நோயால், பொதுமக்கள் பீதியில் உறைந்துள்ளனர்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here