சன்னி லியோன் மீது பணமோசடி புகார் – கேரளாவில் பரபரப்பு!!

0

நடிகை சன்னி லியோன் மீது கேரளாவில் ஒருவர் பணமோசடி செய்துள்ளதாக புகார் அளித்துள்ளார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தற்போது இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சன்னி லியோன்:

வெளிநாட்டு நடிகையாக வலம் வருபவர் தான் சன்னி லியோன். ஆனால் இவருக்கு இந்தியாவிலும் தனி ரசிகர்கள் பட்டாளமே உள்ளது. இவர் படங்களில் கவர்ச்சியாக நடித்து அனைவரையும் கவர்ந்துள்ளார். ஆனால் நிஜ வாழ்க்கையில் இவர் பல நல்ல செயல்களில் ஈடுபட்டு வருகிறார். இதனாலையே பலருக்கும் இவரை பிடித்துள்ளது. இவர் நிவாரண நிதியாக பல்லாயிரக்கணக்கான ரூபாய்களை மக்களுக்காக வழங்கியுள்ளார். தற்போது இவர் பணமோசடி செய்ததாக கூறி கேரளாவில் ஒருவர் புகார் அளித்துள்ளார்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. கேரளா மாநிலம் எர்ணாகுளம் மாவட்டம் பெரும்பாவூரை சேர்ந்த ஷியாஸ் என்பவர் கேரளா டிஜிபியிடம் புகார் அளித்துள்ளார். அவர் கூறியதாவது, கடந்த 2 வாரங்களுக்கு முன்பாக தனது கணவன் மற்றும் குழந்தைகளுடன் சன்னி லியோன் கேரளா வந்திருந்தார். கொச்சியில் இருக்கும் தனது துணி கடைக்கு வருகை தருவதாக கூறி தன்னிடம் ரூ. 29 லட்சம் பணம் வாங்கினார்.

தனுஷ் பட நடிகர் தூக்கிட்டு தற்கொலை – அதிர்ச்சியில் திரையுலகம்!!

ஆனால் அவர் சொன்னது போல் எனது கடைக்கு வரவில்லை. எனவே அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார். இதனை தொடர்ந்து கொச்சி குற்றப்பிரிவு சன்னி லியோனிடம் விசாரணை நடத்த உத்தரவிட்டது. இதனை தொடர்ந்து தற்போது போலீசார் சன்னி லியோனிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here