Tuesday, May 14, 2024

கன்னியாஸ்திரி அபயா கொலை வழக்கு – 28 ஆண்டுகளுக்கு பிறகு தீர்ப்பு!!

Must Read

28 ஆண்டு காலமாக இழுபறியில் இருந்து வந்த கன்னியாஸ்திரி அபயா கொலை வழக்கிற்கு இன்று கேரள நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. பாதிரியார் மற்றும் கன்னியாஸ்திரி ஒருவர் சேர்ந்து தான் கன்னியாஸ்திரி அபாயவை கொலை செய்துள்ளனர் என்றும் அவர்களே குற்றவாளிகள் என்றும் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

28 ஆண்டுகள் நடந்த வழக்கு:

28 ஆண்டுகளுக்கு முன்பு கேரளாவின் கோட்டயத்தில் உள்ள பியஸ் 10வது கான்வென்ட்டில் கன்னியாஸ்திரியான அபயா தங்கியிருந்தார். அவர் கடந்த 1992 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 27 ஆம் தேதி தேவாலயத்திற்கு அருகில் இருந்த கிணற்றில் பிணமாக கண்டெடுக்கப்பட்டார். இதனால் அதிர்ச்சி அடைந்த மக்கள் போலீசில் புகார் தெரிவித்து விசாரித்தனர். இவரது மரணத்திற்கு காரணம் தேவாலயத்தின் பாதிரியார்கள் என்று கூறப்பட்டது. இந்த வழக்கினை மாநில நிர்வாகம் சரியாய் விசாரிக்கவில்லை என்ற குற்றசாட்டு எழுந்ததை அடுத்து இந்த வழக்கினை சிபிஐ விசாரித்தது.

Telegram Channel => Join செய்ய கிளிக் பண்ணுங்க!!

இவரது மரணத்திற்கு பாதிரியார்கள் மற்றும் ஒரு கன்னியாஸ்திரி தான் காரணம் என்று கூறப்பட்டது. அவர்கள் அனைவரும் கன்னியாஸ்திரி அபாயவை கற்பழித்து கொலை செய்தது தெரிய வந்தது. இதனை அடுத்து கொலைக்கு காரணமாக இருந்த பாதிரியார்களான தாமஸ் கோட்டூர், ஜோஸ் பூத்திரிக்கையில் மற்றும் கன்னியாஸ்திரி செஃபி ஆகியோரை சிபிஐ அதிகாரிகள் கைது செய்து நீதிமன்றத்தில் நிறுத்தினர். இவர்களுக்கு நார்க்கோ அனாலிசிஸ் சோதனை நடைபெற்றது. அதில் இவர்கள் அனைவர்க்கும் அபயா மரணத்திற்கும் தொடர்பு இருப்பது தெரிய வந்துள்ளது.

நடிகர் சோனு சூட்டிற்கு கோவில் கட்டிய கிராம மக்கள் – தெலுங்கானாவில் நெகிழ்ச்சி!!

இப்படியாக தெரிய வந்தும் அரசியல் செல்வாக்கு காரணமாக வழக்கு பலமுறை முடக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கினை கண்காணித்த சிபிஐ அதிகாரி தனக்கு பல மிரட்டல்கள் வருவதாக பகிரங்கமாகவே தெரிவித்தார். இப்படியான நிலையில் இந்த வழக்கு 28 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது கேரள நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. அதில் கொலைக்கு சம்மந்தப்பட்ட பாதிரியார் மற்றும் கன்னியாஸ்திரி இருவருமே குற்றவாளிகளே என்றும் அவர்களுக்கு வழங்கப்பட உள்ள தண்டனை குறித்து டிசம்பர் 23 ஆம் தேதி குறிப்பிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest News

நடிகர் சூர்யா-வும் அரசியலில் களமிறங்க உள்ளாரா? சைலண்ட்டாக நடந்த கூட்டம்? வெளியான முக்கிய தகவல்!!!

தமிழ் சினிமாவின் பிரபல நடிகரான விஜய் 'தமிழக வெற்றிக் கழகம் (TVK)' எனும் கட்சியை, சமீபத்தில் தொடங்கி உள்ளார். இதைத்தொடர்ந்து வரும் 2026 ஆம் ஆண்டு...
- Advertisement -

More Articles Like This

- Advertisement -