
தமிழ்நாடு, கேரளா உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் கடந்த ஆகஸ்ட் மாதம் போதிய மழை பொழிவு இல்லாமல் வழக்கத்திற்கு மாறாக வறட்சியே நிலவி இருந்தது. ஆனால் கடந்த சில நாட்களாக கேரளாவின் பல்வேறு பகுதிகளிலும் கனமழை பெய்து வருவதால், பம்பை ஆற்றில் நீர்வரத்து அதிகரித்ததோடு, பத்தனம்திட்டா மாவட்டத்தில் உள்ள சில பகுதிகளில் நிலச்சரிவுகளும் ஏற்பட்டு வருகிறது.
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இந்த நிலையில் கேரளாவில் கோட்டயம், ஆலப்புழா, திருச்சூர், எர்ணாகுளம் ஆகிய பகுதிகளுக்கு மஞ்சள் எச்சரிக்கையை வானிலை மையம் அறிவித்துள்ளது. அதேபோல் இன்று (செப்டம்பர் 5) பத்தனம்திட்டா மற்றும் இடுக்கி மாவட்டங்களில் 12 முதல் 20 செ.மீ. அளவுக்கு கனமழை பதிவாக வாய்ப்புள்ளதால் ஆரஞ்சு எச்சரிக்கையும் விடுத்துள்ளனர்.