மாஸ் என்ட்ரி கொடுத்த மணப்பெண், மாப்பிள்ளை உட்பட அனைவரும் சர்ப்ரைஸ்..! வைரலான நடன வீடியோ..!

0

கேரளா மாநிலம் கன்னூர் மாவட்டத்தில் நடைபெற்ற ஒரு திருமணத்தில் மணப்பெண் சிவப்பு சேலை அணிந்து வேற லெவலில் நடனமாடியபடி மணமேடைக்கு வந்த நிகழ்வு அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தி உள்ளது.

குனிந்த தலை நிமிராமல்..!

Tamil Wedding
Image result for whatsapp logo

வாட்ஸ்ஆப் இல் தகவல்களைப் பெறஇங்கே கிளிக்செய்யவும்

நம் இதுவரை நேரில் பார்த்த திருமணங்களிலும், திரைப்படத்திலும் திருமண நிகழ்வு என்றால் அய்யர், ‘பொண்ண அழைச்சுட்டு வாங்கோ’ என சொன்னதும் நாலைந்து பெண்கள் சூழ்ந்து வெக்கத்தோடு இருக்கும் மணப்பெண்ணை அழைத்துக் கொண்டு மணவறைக்கு வருவர். அந்த பெண்ணும் திருமணம் முடியும் வரை குனிந்த தலை நிமிராமல் திருமணம் முடியும் வரை அமைதியாக உட்கார்ந்து இருப்பார். இது தான் திருமணம் என்றால் காலம் காலமாக நமது சமூகத்தில் நடக்கும் நிகழ்வு.

இது 2020 மக்களே..!

ஆனால் இந்த இருபதாம் நூற்றாண்டில் அந்த வெக்கம் எல்லாம் பெண்களிடம் இருந்து ஓடோடி விட்டது. கேரளா மாநிலம் கன்னூர் மாவட்டத்தில் நடந்த திருமணத்தில் வருண் – அஞ்சலி என்ற ஜோடிக்கு திருமணம் நடந்தது. நண்பர்கள், உறவினர்கள் புடைசூழ மண்டபமே நிறைந்து இருந்தது.

மாப்பிள்ளையும் தாலி கட்ட மேடையில் தாயாராக உட்கார்ந்து இருந்தார். அப்போது மணப்பெண் அஞ்சலி மாஸாக டான்ஸ் ஆடிக்கொண்டே மணமேடைக்கு வந்தார்.

Image result for telegram logo

டெலிகிராம் இல் தகவல்களைப் பெற இங்கே கிளிக் செய்யவும்

மலையூரு நாட்டாம..!

இது மாப்பிள்ளை மட்டுமில்லாமல் அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியது. மணப்பெண்ணுடன் சேர்ந்து சிறுமிகளும், நண்பர்களும் நடனமாடினர். மம்பட்டியான் படத்தில் வரும் மலையூரு நாட்டாமை என்ற பாட்டிற்கு சிறப்பாக குத்தாட்டம் போட்டபடி மேடைக்கு வந்தார் அஞ்சலி. இது அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியது. இது தொடர்பான வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் தீயாக பரவி வருகிறது.

To Subscribe Youtube Channel Click Here
To Join WhatsApp Group Click Here
To Join Telegram ChannelClick Here

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here