“கோவிட் -19 விழிப்புணர்வு பிரச்சாரத்தில் இணைந்த”  – சிவகார்த்திகேயன் பட நடிகை!!!

0

கொரோனா வைரஸ் தொடர்பாக மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார் கீர்த்தி சுரேஷ்.

Youtube  => Subscribe செய்ய கிளிக் பண்ணுங்க!!

கோவிட் -19 விழிப்புணர்வு:

கோவிட் -19 தொற்றுநோயின் இரண்டாவது அலையின் பிடியில் நாடு முழுவதும் இருப்பதால்; பாதுகாப்பாக இருப்பது குறித்து பொதுமக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்த; தமிழக அரசு திரைப்பட நட்சத்திரங்களை அணுகியுள்ளது. முன்னதாக சிவகார்த்திகேயன், ஜெயம் ரவி, மற்றும் சத்யராஜ் ஆகியோரின் மூன்று வீடியோக்களை அரசாங்கம் வெளியிட்டது.

தற்போது நடிகை கீர்த்தி சுரேஷ் கோவிட் -19 விழிப்புணர்வு பிரச்சாரத்தில் இணைந்தார். இது பற்றி அவர் கூறுகையில் “சமீபத்தில் தனது முதல் டோஸ் கோவிட் -19 தடுப்பூசியை எடுத்துக் கொண்டதாக கூறினார்”; மேலும் அனைவரும்  தடுப்பூசி போடுமாறு வலியுறுத்தினார். விழிப்புணர்வு வீடியோவில்; நடிகை கீர்த்தி சுரேஷ் தவிர்க்க முடியாத சூழ்நிலைகளில் மட்டுமே வெளியே செல்லுங்கள் என்று பொதுமக்களை கேட்டுக் கொண்டார். இரட்டை முகமூடியை அணிந்து கொள்ள வேண்டும்; என்றும் அவர் வலியுறுத்தினார்.

மேலும் “கொரோனா தொற்றைக் கட்டுப்படுத்த நாமே சின்னச்சின்ன வழிமுறைகளைப் பின்பற்றினாலே போதும். சமூக விலகலைக் கடைபிடியுங்கள். கைகளைச் சுத்தமாக வைத்துக் கொள்ளுங்கள். அரசாங்கம் சொல்லும் விதிமுறைகளையும், வழிமுறைகளையும் பின்பற்றுங்கள்” என்றும் கூறினார்.

முழு விடீயோவை பார்க்க

Telegram Channel  => Join செய்ய கிளிக் பண்ணுங்க!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here