விஜய் டிவியின் பிரபல சீரியலில் நடந்த மாற்றம்… இனி இவருக்கு பதில் இவர் தானா???

0

விஜய் டிவியில் பல்வேறு திருப்பங்களுடன் ஒளிபரப்பாகி வரும் சீரியல் காற்றுக்கென்ன வேலி. இந்த சீரியலில் கதையின் நாயகன் சூர்யாவின் அம்மா  சாரதாவாக நடித்து வந்த மாளவிகா அவினாஷ் விலகியதை அடுத்து அந்த இடத்திற்கு ஒரு புது முக நடிகை நடிக்க உள்ளார். தற்போது அவரின் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

ஒரு சில மாதங்களுக்கு முன்பு விஜய் டிவியின் புது வரவாக வந்த சீரியல் காற்றுக்கென்ன வேலி. இந்த சீரியல் வங்காள மொழி தொடரான மொஹார் என்ற சீரியலின் மறு ஆக்கம் தான். இந்த சீரியலின் மைய கருத்து, பல கனவுகள் மற்றும் ஆசைகள் உடன் இருக்கும் ஒரு பெண், படிக்க விடாமல் திருமணம் செய்து வைக்க நினைக்கும் அப்பாவிடம் இருந்து தப்பித்து தன்னுடைய பேராசிரியர் உதவியால் பட்டணத்தில் இருக்கும் ஒரு கல்லூரியில் பல பிரச்சனைகளை தாண்டி சேர்ந்து படிக்கிறார்.

இருப்பினும் அங்கு அவளை படிக்க விடாமல், காலேஜ் விட்டு விரட்ட பலர் முயற்சிக்கின்றனர். மேலும் இவை அனைத்தும் கடந்து துணிச்சலோடு ஒவ்வொரு பிரச்சனையும் எதிர் கொண்டு அந்த பெண் தன்னுடைய  கனவை நிறைவேற்றி சாதிப்பாளா? என்பது தான் இந்த சீரியலின் மீதி கதை.

அந்த சீரியலில் வெண்ணிலாவாக பிரியங்கா குமார், சூர்யாவாக சூர்யா தர்ஷன், சூர்யாவின் அம்மா  சாரதாவாக   மாளவிகா அவினாஷ் உள்ளிட்ட பல பிரபலங்கள் நடித்து வருகின்றனர். இந்நிலையில் இந்த சீரியல் பற்றி புதிய அறிவிப்பு ஒன்று வெளியாகி உள்ளது.

அதாவது இதில்  சாரதாவாக நடித்து வரும் மாளவிகா அவினாஷ்  தீடிரென விலகியதால் அந்த இடத்திற்கு ஒரு புதுமுக நடிகையை அறிமுகமாக இருக்கிறார். மேலும் அவரின் புகைப்படம் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here