கர்நாடக மாநிலத்தில் இன்று முதல் ஜனவரி 7ம் தேதி வரை 10 நாட்களுக்கு இரவு நேர ஊரடங்கு உள்ளிட்ட கூடுதல் கட்டுப்பாடுகள் அமலுக்கு வருவதாக அம்மாநில அரசு தெரிவித்துள்ளது.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
மாநில அரசு அதிரடி :
இந்தியா முழுவதும் கொரோனாவின் உருமாறிய ஓமைக்ரான் வைரஸ் பரவல் தீவிரம் எடுத்துள்ளது. இதனால், மத்திய பிரதேசம், உத்தரகண்ட், உத்தர பிரதேசம், அசாம், பீகார், டெல்லி உள்ளிட்ட பல மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு உள்ளிட்ட கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. அந்த வகையில், நம் அண்டை மாநிலமான கர்நாடகாவில் இன்று முதல் 7ம் தேதி வரை 10 நாட்களுக்கு இரவு 10 மணி முதல் காலை 5 மணி வரை இரவு நேர ஊரடங்கு உள்ளிட்ட கூடுதல் கட்டுப்பாடுகள் நடைமுறைக்கு வருவதாக அம்மாநில அரசு தெரிவித்துள்ளது.
இதனால், வருகிற டிசம்பர் 30ம் தேதி முதல் ஜனவரி 2-ஆம் தேதி உணவகங்கள், கேளிக்கை விடுதிகள் உள்ளிட்ட மக்கள் அதிகம் கூடும் இடங்களில் 50 சதவீத இருக்கைகளுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படும் என திட்டவட்டமாக தெரிவித்துள்ளது கர்நாடக அரசு. மேலும், திருமணம் மற்றும் இறப்பு உள்ளிட்ட நிகழ்ச்சிகளுக்கு 300 பேருக்கு மேல் அனுமதி இல்லை எனவும், இந்த விதிகளை மீறுவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், அம்மாநில காவல்துறை தெரிவித்துள்ளது.
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்
Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்