கன்னட சினிமாவில் பல படங்களில் கதாநாயகியாக நடித்து புகழ் பெற்றவர் சவுஜன்யா என்ற சவி மாரப்பா. இவர் கடந்த செப்டம்பர் 30 ஆம் தேதி யாரும் எதிர்பாக்காத வகையில் தன்னுடைய வீட்டில் தூக்கில் தொங்கியபடி பிணமாக மீட்கப்பட்டார்.
தான் செய்துள்ள தற்கொலைக்கும் பிறர்க்கும் எந்த தொடர்பும் இல்லை என சவுஜன்யா எழுதிய கடிதமும் போலீசாருக்கு கிடைத்தது. ஆனால் சவுஜன்யா தந்தை தனது மகளை அவளது காதலன் விவேக் தான் கொலை செய்து தூக்கில் தொங்கவிட்டதாக குற்றம் சுமத்தினார்.
இதனால் இந்த வழக்கின் விசாரணையை போலீசார் தீவிரப்படுத்தினர். தற்போது சவுஜன்யாவின் பிரேத பரிசோதனை அறிக்கை வந்துள்ளது. அதில் அவர் கொலை செய்யப்படவில்லை என்பது உறுதியாகியுள்ளது. இதன் மூலம் சவுஜன்யா மரணத்திற்கும் அவர் காதலருக்கு எந்த சம்மந்தமும் இல்லை என்பதும் தெளிவாகியுள்ளது.
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்