தமிழகத்தில் தகுதி வாய்ந்த குடும்பத் தலைவிகள் அனைவருக்கும் மாதந்தோறும் ரூபாய் 1000 உரிமை தொகை வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் இத்திட்டத்தின் கீழ் இன்னும் பயன் கிடைக்காதவர்கள் மேல் முறையீடு செய்யலாம் என அறிவிக்கப்பட்ட நிலையில் பலரும் அதற்கு விண்ணப்பித்து வருகின்றனர். ஆனால் இப்போது தேர்தல் வேறு நெருங்கி வருவதால் கூடிய விரைவில் இன்னும் மகளிர் உரிமை தொகை திட்டத்தின் பயனாளர்கள் அதிகரிக்கப்படும் என்று கூறியுள்ளனர்.
இப்படி இருக்கும் சூழலில் ஒரு பெண் நேரடியாக அமைச்சரிடம் தனக்கு மகளிர் உரிமை தொகை வரவில்லை என புகார் அளித்துள்ளார். இந்த புகாரை அடுத்து உடனடியாக அமைச்சர் மேலிடத்தை தொடர்பு கொண்டு அந்த பெண்ணுக்கு ஜூன் மாதம் முதல் மகளிர் உரிமை தொகை கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளார். தற்போது இந்த விஷயம் இணையத்தில் வைரலாக பலரும் அமைச்சரிடம் நேரடியாக முறையிட்டால் மகளிர் உரிமை தொகை கிடைக்கும் என கூறி வருகின்றனர்.