பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல்., தேர்தலை ஓட்டி பரபரப்பு.. தீவிர சோதனையில் போலீசார்!!

0

பொதுவாக மக்கள் அதிகம் கூடும் பொது இடங்களில் பயங்கரவாதிகள் வெடிகுண்டு மிரட்டல் விடுவதை செய்திகளில் பார்க்க முடிகிறது. அந்த வகையில் இன்று சென்னை அசோக் நகர் பகுதியில் இயங்கும் தனியார் பள்ளி ஒன்றுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடப்பட்டுள்ளது. அதாவது காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தொலைபேசி மூலமாக வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது.

இதையடுத்து போலீசார் மிரட்டல் விட்டவர்கள் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் மிரட்டல் விடப்பட்டுள்ள தனியார் பள்ளிக்கு வெடிகுண்டு நிபுணர்கள் உதவியுடன் போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் பெற்றோர்களுக்கு பள்ளி நிர்வாகம் அழைப்பு விடுத்து மாணவர்களை அழைத்து செல்லும்படி அறிவித்துள்ளனர்.

Enewz Tamil WhatsApp Channel 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here