தன் கணவரை பற்றி மனம் திறக்கும் காஜல் அகர்வால் – அப்படி பட்டவரா அவரு??

0

தமிழ், தெலுங்கு என பல மொழிகளில் முன்னணி நாடியாக வலம் வந்தவர் காஜல் அகர்வால். அவரது ரசிகர்கள் அவருக்கு எப்பொழுது திருமணம் என்று கேட்டு கொண்டிருந்த நிலையில் கடந்த மாதம் 30 ஆம் தேதி அவருக்கு திருமணமும் நடந்தேறியது. இந்நிலையில் தனது கணவரை பற்றி மனம் திறந்துள்ளார் காஜல்.

காஜல் அகர்வால்

தமிழில் வெளியான பொம்மலாட்டம் படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமானவர் காஜல் அகர்வால். அதன் பின் அவருக்கு வாய்ப்புகள் கிடைக்கவில்லை என்றாலும் அவரது விடா முயற்சியால் தற்போது முன்னணி நடிகையாக வலம் வருகிறார். மேலும் அவருக்கு சில காலமாக பட வாய்ப்புகள் இல்லை என்றே சொல்லலாம்.

Telegram Channel => Join செய்ய கிளிக் பண்ணுங்க!!

kajal marriage

அதுவும் கொரோனா காலகட்டத்தில் அவரது மார்க்கெட் சரிவை கண்டது என்றே சொல்லலாம். அதன் பிறகு அவரின் ரசிகர்கள் பலரும் அவருக்கு எப்பொழுது திருமணம் என்று கேட்டுக்கொண்டே இருந்தனர். இதற்கிடையில் லாக்டவுன் சமயத்தில் காதும் காதும் வைத்தபடி தொழிலதிபரான கௌதம் கிச்சுலுவுடன் நிச்சயத்தை முடித்தார் காஜல்.

இந்த செய்தியும் சமூக வலைத்தளங்களில் காட்டுத்தீ போல பரவியது. அதன் பிறகு திருமண தேதியையும் காஜல் ட்விட்டர் பக்கத்தில் அறிவித்தார். இதனால் அவரது ரசிகர்கள் பலரும் அவருக்கு வாழ்த்துக்களையும் தெரிவித்தனர். அவரது கல்யாணமும் அனைவரது ஆசிர்வாதங்களுடன் கோலாகலமாக நடைபெற்றது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

kajal and gautam kitchulu
kajal and gautam kitchulu

அதன் பிறகு அவர்கள் மாலத்தீவுக்கு தேனிலவுக்கு சென்றனர். அந்த புகைப்படங்களும் சமூக வலைத்தளங்களில் வெளியானது. மேலும் இதற்கு 40 லட்சம் வரை செலவு செய்தார்களாம். இது அனைவருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. தற்போது காஜல் அளித்த பேட்டியில் தன் கணவரை பற்றி மனம் திறந்துள்ளார்.

kajal agarwal

அவர்கள் ஹோட்டலில் மதிய உணவிற்கு சென்றது தான் அவர்களின் முதல் சந்திப்பாம். அவர் ப்ரொபோஸ் செய்ய போவது இவருக்கு ஏற்கனவே தெரியுமாம். ஆனால் கௌதம் முதலில் காஜல் தந்தையிடம் அனுமதி கேட்டு தான் காஜலை விரும்பினாராம்.

மேலும் ப்ரொபோஸ் பண்ணியே ஆக வேண்டும் என்று காஜல் வற்புறுத்தியவுடன் தான் அவர் தன் காதலை தெரிவித்தாராம். மேலும் கௌதம் அவர்களுக்கு படம் பார்ப்பதில் கொஞ்சம் கூட ஆர்வம் கிடையாது, நான் கட்டாயப்படுத்தி தான் பார்க்கவைப்பேன். அவருக்கு மொபைல் என்றால் ரொம்ப இஷ்டம். அவரின் முதல் காதல் என்றே சொல்லலாம். ஆனால் அதை அவர் கைவிட்டு விட்டார் என்றும் கூறியுள்ளார்.

அவரின் திருமணம் கொரோனாவுக்கு இடையே பல கஷ்டங்களுடன் தான் நடந்ததாம். மேலும் திருமணம் முடிந்தவுடன் புது வீட்டிற்கு சென்றது நல்ல அனுபவமாக இருந்தது. வேலைக்கு போய்க்கொண்டே குடும்பத்தை பார்த்துக்கொள்ளும் பெண்களின் மேல் எனக்கு மதிப்பு அதிகம்.

தற்போது இன்னும் அதிகமாகி இருப்பதாக கூறியுள்ளார். மேலும் கௌதம் தன்னை அன்பாக பார்த்துக்கொள்கிறார். நான் வெளியே சென்று வந்தால் நான் பத்திரமாக வந்து விட்டேனா?? இன்றைய நாள் எப்படி போனது என்று அன்போடு விசாரிக்கிறார். திருமணத்துக்கு முன்னாடி இவர் இப்படி நடந்துகொண்டதில்லையாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here