தமிழ், தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வந்த காஜல் அகர்வால் தற்போது தனது சினிமாவை விட்டு விலக இருப்பதாக அதிரடியாக அறிவித்துள்ளார்.
காஜல் அகர்வால்
தமிழில் வெளியான பொம்மலாட்டம் படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமானார். அதன் பிறகு கதாநாயகியாக நடித்தாலும் இவருக்கு அந்த அளவிற்கு பிரபலம் கிடைக்கவில்லை. தெலுங்கில் இவர் நடித்த பிருந்தாவனம் திரைப்படம் மாஸ் ஹிட் அடிக்கவே இவருக்கு மார்க்கெட்டை தூக்கி விட்டது.
அதன் பிறகு மகதீரா திரைப்படமும் சூப்பர் ஹிட். அடுத்தடுத்து பல படங்களைக் கமிட்டானார். தமிழில் பல முன்னணி நடிகர்களுடன் நடிக்கும் வாய்ப்பும் இவருக்கு கிடைத்தது. விஜய் உடன் தொடர்ந்து இரண்டு படங்களில் ஜோடி சேர்ந்தார்.
இவர் நடித்த விவேகம் திரைப்படமும் ஹிட் அடிக்கவே இவர் காட்டில் அடைமழை தான். அதன் பிறகு கொஞ்சம் கொஞ்சமாக இவருக்கு வாய்ப்புகள் குறையவே திருமணம் செய்துகொண்டார். தற்போது அவரது கணவருடன் பிஸ்னஸில் களமிறங்கலாமா?? என்று யோசித்துக்கொண்டுள்ளாராம்.
மேலும் தற்போது கணவருக்கும் பிசினஸில் பல உதவிகளையும் செய்து வருகிறார். இப்படி இருக்க தற்போது அவர் அளித்துள்ள பேட்டியில் தன் கணவர் சினிமாவை விட்டு விலக சொன்னால் கண்டிப்பாக விலகிவிடுவேன் என்று கூறியுள்ளார். இதனால் ரசிகர்கள் சோகத்தில் உள்ளனர்.