முன்னாள் காதலனை அடித்து கொன்ற காதலி …. திருமணமான ஒருவாரத்துக்குள் நடந்த விபரீதம்!!!

0

மத்தியப்பிரதேசத்தில் திருமணமான இரண்டாம் நாளில் மாயமான இளைஞர், முன்னாள் காதலியால் அடித்துக்கொள்ளப்பட்டு பிணமாக மீட்கப்பட்டார்.

முன்னாள் காதலனை அடித்து கொன்ற காதலி:

மத்தியப்பிரதேச மாநிலம் ஜபல்பூர் பகுதியை சேர்ந்தவர் 26 வயதான சோனு படேலுக்கு கடந்த மே 14-ம் தேதி திருமணமானது. கடந்த  மே 16-ம் தேதியில் இருந்து அதாவது கல்யாணம் நிலையில் சோனுவை காணவில்லை. மொபைல் போன் சரி செய்து விட்டு வருகிறேன் என வீட்டில் உள்ளவர்களிடம் கூறிவிட்டு சோனு வெளியில் சென்றுள்ளார். அதன்பின்னர் அவர் வீடு திரும்பவில்லை.

இவரை காணவில்லை என்று சிகோரா காவல்நிலையத்தில் குடும்பத்தினர் புகார் அளித்தனர். இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர்.  இந்நிலையில்தான் சிகோரா காவல்நிலைய எல்லைக்குட்பட்ட காட்டுப்பகுதியில் இளைஞரின் ஒருவரின் சடலம் இருப்பதாக மே 24-ம் தேதி காவல்துறையினருக்கு தகவல் வந்தது.

இதுகுறித்து விசாரணை நடத்திய போது, சோனுவுக்கு அவரது உறவினருமான மதுவுக்கு இடையே பழக்கம் இருந்தது தெரியவந்தது. இந்நிலையில்தான் மாயமான சோனுவின் உடல் காட்டுப்பகுதியில் கண்டெடுக்கப்பட்டது. இதனையடுத்து மதுவிடம் விசாரணை மேற்கொண்டதில் சோனுவை கொலை செய்ததை ஒப்புக்கொண்டார்.

இந்நிலையில்தான் சோனு, மதுவை பார்க்க வந்துள்ளார். சோனு மீது ஆத்திரத்தில் இருந்த மது அவரை கல்லால் அடித்து கொலை செய்ததாக கூறினார். தற்போது அவரை காவல் துறையில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here