தெலுங்கு திரை உலகத்தின் முன்னணி நடிகராக வலம் வருபவர் ஜூனியர் என்டிஆர். இவருக்கென்று தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்ட இவர் தற்போது அந்நோய் தொற்றிலிருந்து மீண்டுள்ளார். எனவே தன் ரசிகர்களுக்கு தனது ட்விட்டர் பக்கத்தில் ட்விட் ஒன்றை பகிர்ந்துள்ளார்.
ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!
ஜூனியர் என்டிஆர், இவர் தெலுங்கு திரைப்பட நடிகர், குச்சிப்புடி நடன கலைஞர், மற்றும் பின்னணிப் பாடகர். இவர் முன்னாள் ஆந்திரப் பிரதேச முதல்வர் என். டி. ராமாராவுடைய பேரன்.இவர் 2001 ஆம் ஆண்டு வெளியான நின்னு சூடாலனி என்ற திரைப்படத்தில் கதாநாயகனாக அறிமுகமானார். தெலுங்கில் இவர் நடித்த ஜனதா கேரேஜ், யேமடோங்கா, சிம்ஹாத்ரி போன்ற படங்கள் ப்ளாக்பஸ்டர் ஹிட் அடித்தன.
இவருக்கு கடந்த 10 ஆம் தேதி கொரோனா தொற்று உறுதியானது. எனவே இவர் வீட்டு தனிமையில் இருந்தார். இதனால் மே 20 அன்று தனது பிறந்த நாளை ரசிகர்கள் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கொண்டாட்டத்தைத் தவிர்க்க வேண்டும் என்று அன்பான வேண்டுகோள் ஒன்றையும் விடுத்திருந்தார். தற்போது இவர் இந்த நோய்த்தொற்றிலிருந்து மீண்டுள்ளதாக ட்விட் செய்துள்ளார்.
அதில் அவர் கூறியதாவது, “கோவிட்-19 பரிசோதனை மேற்கொண்டதில், எனக்கு நெகட்டிவ் என்று வந்துள்ளது இதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.எனக்காக பிரார்த்தனை செய்த அனைவருக்கும் நன்றி.கொரோனாவின் தாக்கம் மிகவும் தீவிரமாக உள்ளது. ஆனால் இதற்கு நல்ல கவனிப்பு , நல்ல மனநிலையுடன் இருந்தால் இந்த நோயை வெல்ல முடியும். உங்களின் சக்தியே உங்களின் மிகப்பெரிய ஆயுதம், வலுவாக இருங்கள் பதற்றப் படாதீர்கள்” இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.
Facebook => Like செய்ய கிளிக் பண்ணுங்க!!