உலக கோப்பையை வென்று சாதனை படைத்த இந்தியா – இங்கிலாந்தை வீழ்த்தி 5வது முறையாக அபார வெற்றி!!

0

வெஸ்ட் இண்டீஸில் உள்ள ஆண்டிகுவாவில் நடைபெற்ற 14வது ஜூனியர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில், இந்திய அணி 5வது முறையாக கோப்பையை கைப்பற்றி வெற்றி பெற்றது.

இந்திய அணி வெற்றி:

இங்கிலாந்து மற்றும் இந்திய அணிகள் மோதிய 14வது ஜூனியர், அதாவது 19 வயதுக்கு உட்பட்டவர்களுக்கான உலக கோப்பை கிரிக்கெட் போட்டியின் இறுதிப் போட்டி, வெஸ்ட் இண்டீஸில் உள்ள ஆண்டிகுவாவில் நடைபெற்றது. இந்த போட்டியின் தொடக்கத்தில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பேட்டிங் தேர்வு செய்தது. இங்கிலாந்து அணி, மிகத் தீவிரமாக விளையாடினாலும், ஜேக்கப்,  கேப்டன் டாம் பிரஸ்ட் உள்ளிட்டோர் தொடக்கத்திலேயே அவுட் ஆகினர். இறுதியில் இங்கிலாந்து அணி,44.5 ஓவர்களில் 189 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

இதன்பிறகு களமிறங்கிய இந்திய வீரர்கள், 190 ரன்கள் என்ற இலக்குடன் விளையாடி அணிக்கு வலு சேர்த்தனர். நிஷாந்த், தினேஷ்,ராஜ் பவா, ரவிக்குமார் உள்ளிட்ட வீரர்கள் ஆட்டமிழக்காமல் மிகச் சிறப்பாக விளையாடினர். இறுதியில் இந்திய அணி 190 ரன்கள் சேர்த்து 5 வது முறையாக கோப்பையை கைப்பற்றியது. இதையடுத்து இந்திய வீரர்களுக்கு ரசிகர்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here