தமிழகத்தில் பள்ளி மற்றும் கல்லூரிகளில் இறுதித் தேர்வு முடிவுக்கு வர உள்ள நிலையில் அடுத்ததாக கோடை விடுமுறை குறித்த ஆலோசனை நடைபெற்று வருகிறது. இந்நிலையில் தமிழகத்தில் உள்ள கல்லூரிகளில் கோடை விடுமுறை குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதாவது அனைத்து பல்கலைக்கழகங்களும் நிர்ணயம் செய்த மொத்த வேலை நாட்களுக்கு குறையாமல் உள்ளது என்பதை உறுதி செய்ய வேண்டும்.
அதன் பின் கல்லூரி முதல்வர்கள் விடுமுறை குறித்து முடிவு எடுக்கலாம் என தெரிவித்துள்ளனர். அதன்படி கல்லூரிகளுக்கான கல்வி இயக்குனர் வெளியிட்ட அறிவிப்பில் வரும் ஜூன் 18ம் தேதி வரை கல்லூரிகளுக்கு கோடை விடுமுறை அளிக்கப்படுவதாகவும் 19ஆம் தேதி முதல் கல்லூரிகள் திறக்கப்படும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.