சர்வதேச ஆஸ்திரேலிய அணியானது, கடைசியாக இந்திய அணிக்கு எதிராக பார்டர்–கவாஸ்கர் டிராபியை விளையாடியது. இந்த தொடருக்கு பிறகு, சர்வதேச அளவில் ஆஸ்திரேலிய அணி எந்த ஒரு போட்டியையும் விளையாடாத நிலையில், ஐபிஎல் தொடர் உள்ளிட்ட சில உள்ளூர் போட்டிகளில் வீரர்கள் விளையாடி வருகின்றனர்.
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இந்த ஐபிஎல் தொடரின் தொடக்கத்திலேயே, ஆஸ்திரேலிய அணியின் ஒரு நாள் தொடர் நம்பர் 1. வீரரான பவுலர் ஜோஷ் ஹேசில்வுட் காயம் காரணமாக விலகுவதாக அறிவித்தார். இதன் பிறகு ஓய்வில் இருந்த இவர், தற்போது உடல் நிலையில் முன்னேற்ற அடைந்து உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு தகுதியானவராக உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
அரசு பேருந்துகளில் ரூ. 2000-ஐ மாற்றலாமா?? வெளியான அதிரடி அறிவிப்பு!!
இவரது வருகை, ஆஸ்திரேலிய அணிக்கு கூடுதல் பலம் சேர்க்க கூடும். ஆஸ்திரேலிய அணி, ஜூன் 7ம் தேதி இந்திய அணிக்கு எதிராக உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியை விளையாட இருக்கிறது. இதனை தொடர்ந்து, இங்கிலாந்து அணிக்கு எதிராக 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட ஆஷஸ் தொடரில் விளையாட உள்ளது. இந்த இரு தொடர்களில், எதிரணியின் பேட்ஸ்மேன்களுக்கு ஜோஷ் ஹேசில்வுட் சிம்ம சொப்பனமாக திகழ்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.