JEE நுழைவுத் தேர்வில், புதிய விதிமுறைகளை கொண்டு வர அரசு முடிவு எடுத்துள்ளதாக மத்திய கல்வி அமைச்சர் உறுதி அளித்துள்ளார்.
அமைச்சர் உறுதி:
மேல்நிலை கல்வியை முடித்த மாணவர்கள், ஐஐடி மற்றும் என் ஐ டி போன்ற தொழில்நுட்பம் மையங்களில் சேர, நாடு தழுவிய அளவில் JEE தேர்வு மத்திய அரசால் 2 கட்டங்களாக நடத்தப்பட்டு வருகிறது. இந்த தேர்வை எழுத விரும்பும் மாணவர்கள், 12ம் வகுப்பு தேர்வில் குறைந்த பட்சம் 75% மதிப்பெண்கள் பெற வேண்டும் என அரசு விதிமுறை வகுத்துள்ளது.
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
இந்த தேர்வில் சில தளர்வுகளை அறிவித்து, புதிய வழிமுறைகளை வெளியிட வேண்டும் என மத்திய அரசுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டு வந்தது. தற்போது இது குறித்த முக்கிய அறிவிப்பு ஒன்றை மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் வெளியிட்டுள்ளார்.
கிராமங்களில் வீடு தேடி சென்று மருத்துவம்.., முதலமைச்சர் அதிரடி அறிவிப்பு!!!
அதாவது JEE மெயின் நுழைவுத் தேர்வு எழுதும் மாணவர்கள் 12ம் வகுப்பு 75% மதிப்பெண்கள் பெறாவிட்டாலும், இந்த தேர்வை எழுதலாம் என்று புதிய விதிமுறை கொண்டுவரப்பட உள்ளதாக அறிவித்தார். இதனால் மத்திய அரசின், தொழில்நுட்ப நிறுவனங்களில் அதிக பட்ச மாணவர்கள் சேரும் சூழல் உருவாகும் என அமைச்சர் நம்பிக்கை தெரிவித்தார்.