மறைந்த முன்னாள் தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா வாழ்ந்த இல்லலத்தை நினைவு இல்லமாக தமிழக அரசு அறிவித்துள்ளது. தற்போது நினைவு இல்லம் திறப்பதற்கான தேதியை அறிவித்துள்ளனர்.
நினைவு இல்லம்:
தமிழகத்தின் மறைந்த முன்னாள் முதலமைச்சரும் மற்றும் அதிமுக கட்சியின் தலைவருமான ஜெயலலிதா வாழ்ந்த சென்னை போயஸ் கார்டன் இல்லத்தை நினைவு இல்லமாக அறிவிக்க வேண்டும் என்று பலர் கோரிக்கை விடுத்தது வந்தனர். அவரது மறைவிற்கு பின்பு தமிழகத்தில் மற்றும் அதிமுக காட்சியிலும் ஏற்பட்ட குழப்பங்களை பல. மேலும் அவர் தமிழக மக்களுக்காக செய்த நல திட்டங்கள் அனைத்தும் தற்போது வரை மக்களுக்கு சென்று உதவி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது ஜெயலலிதா வாழ்ந்த இல்லத்தை நினைவு இல்லமாக தமிழக அரசு அறிவித்துள்ளது.
ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!
“நீ உண்மையாவே பத்தினினா செத்து போ” – சித்ராவை வார்த்தைகளால் கொடுமைப்படுத்திய ஹேமந்த்!!
மேலும் இந்த இல்லம் திறப்பதற்கான தேதியும் அறிவித்துள்ளது. அதுமட்டுமல்லாமல் வரும் 27ம் தேதி அன்று சென்னை மெரினா கடற்கரையில் ஜெயலலிதாவின் நினைவிடம் திறக்கப்படவுள்ளது. இதற்கு மறுநாளான 28ம் தேதி அன்று காலை 10.30 மணி அளவில் ஜெயலலிதாவின் நினைவு இல்லம் திறக்கப்படும் என்று தெரிவித்துள்ளனர். மேலும் இந்த இல்லத்தை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, பன்னிர்செல்வம் முன்னிலையில் திறந்துவைப்பார் என்றும் தெரிவித்துள்ளனர். மேலும் இந்த இல்லம் மக்கள் பார்வையிட அனுமதிக்கப்படுவார்கள் என்றும் தெரிவித்துள்ளனர்.