சர்வதேச இந்திய அணியானது, இங்கிலாந்து அணிக்கு எதிராக 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இத்தொடரின் முதல் மற்றும் மூன்றாவது போட்டிகளில் இந்தியா அபார வெற்றி பெற்று 2-1 என்ற கணக்கில் முன்னிலை வைக்கிறது. இதைத் தொடர்ந்து இவ்விரு அணிகள் மோதும் 4வது போட்டி வரும் பிப்ரவரி 23ஆம் தேதி ராஞ்சியில் அரங்கேற உள்ளது. இந்நிலையில், இந்திய அணியின் நட்சத்திர பந்துவீச்சாளர் ஜஸ்பரிட் பும்ரா குறித்து ஓர் முக்கிய தகவல் கசிந்துள்ளது.
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
அதாவது இங்கிலாந்துக்கு எதிரான 4வது டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியில் இருந்து பும்ராவிற்கு ஓய்வு அளிக்க இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஏற்கனவே அவருக்கு இரண்டாவது டெஸ்ட் போட்டியில் ஓய்வு அளிக்கப்பட்டது. எனவே இவ்விரு அணிகள் மோதும் 4வது போட்டியின் முடிவைப் பொறுத்தே முன்புற கடைசி டெஸ்டில் விளையாடுவாரா? இல்லையா? என்ற கேள்விக்கு பதில் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
TNPSC “குரூப் 1” தேர்வர்களே., ஆன்லைன் மூலம் இப்படி படித்தால் வெற்றி எளிது? மாஸ் அப்டேட்!!!