மாநிலம் முழுவதும் அரசு பள்ளிகளில், இனி காலை கூட்டத்தின் போது செய்திகள் மற்றும் வினாடி வினா சார்ந்த அமர்வுகள் நடைபெற வேண்டும் என ஜார்கண்ட் அரசு உத்தரவிட்டுள்ளது
அரசு உத்தரவு:
பள்ளி மாணவர்களுக்கு காலை வகுப்பு தொடங்குவதற்கு முன், இறைவணக்க கூட்டம் நடைபெறும். இந்த கூட்டத்தில் பள்ளிகள் பின்பற்ற வேண்டிய நடைமுறை குறித்த விவரங்களை, அரசு ஏற்கனவே வெளியிட்டுள்ளது. அந்த வகையில், ஜார்கண்ட் அரசு, காலை அசெம்பிளின் போது செய்தி வாசிப்பு மற்றும் வினாடி வினா சார்ந்த செயல்முறைகள் நடத்தப்பட வேண்டும் என ஏற்கனவே அறிவுறுத்தியுள்ளது.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
ஆனால் இதனை பள்ளிகள் முறையாக பின்பற்றாததால், மீண்டும் இது சார்ந்த அதிகாரப்பூர்வ உத்தரவை JCERT வெளியிட்டுள்ளது. வருகிற மார்ச் 31ஆம் தேதி வரை காலை 9:00 மணி முதல் 9:15 வரையும், ஏப்ரல் 1 முதல் ஜூன் 30 வரை காலை 7:00 மணி முதல் 7:15 வரையிலும் இறைவணக்க கூட்டம் நடத்தப்பட வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.
UPI Pin நம்பர் இல்லாமல் இனி Transaction.., வந்தாச்சு புது அப்டேட்.., பயனர்கள் குஷி!!
இந்த கூட்டத்தில், மாவட்ட மற்றும் மாநில செய்திகள், 15 பொது அறிவு வினாக்கள் வாசிக்கப்பட வேண்டும் எனவும், இதனை கண்காணிக்க whatsapp மூலம் ஒரு குழு அமைக்கப்படும் எனவும் உத்தரவிட்டுள்ளது.