கொரோனா பரவல் இருந்து தங்களை பாத்து காத்துக்கொள்ள ஒரே பேராயுதமாக விளங்குவது தடுப்பூசி என்பதையே மருத்துவ நிறுவனங்கள் வலியுறுத்தி வருகின்றன. இதை வலியுறுத்தி பிரபலங்களும், நடிகர்களும், நடிகைகளும் தடுப்பூசி செலுத்தி கொண்டு தங்கள் புகைப்படங்களை வெளியிட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். தற்போது நடிகை ஜனனி ஐயர் தடுப்பூசி செலுத்தி கொண்டு உள்ளார்.
ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!
அவன் இவன் படம் மூலம் தமிழில் அறிமுகம் ஆனவர் ஜனனி ஐயர். இதையடுத்து இவர் தமிழில் பல படங்களில் நடித்துள்ளார். இவர் தமிழ் மற்றும் மலையாளம் ஆகிய இரு மொழிகளில் தனது நடிப்பை கோலூன்றி உள்ளார். தெகிடி,பலூன்,அதே கண்கள் உட்பட பல தமிழ் திரைப்படங்களில் நடித்துள்ளார்.பின்னர் இவர் பிக் பாஸ் போட்டியில் கலந்துகொண்டார்.
கொரோனா நோய் தொற்று காரணமாக ஊரடங்கானது அமலில் உள்ளது.மேலும் அந்த தொற்று பரவல் குறைந்து வரும் நிலையில் நம்மை காத்து கொள்ள அனைவரும் தடுப்பூசியை போட்டுக்கொள்ள வேண்டும் என்பதையே அனைத்து தரப்பினரும் வலியுறுத்தி வரும் நிலையில் நடிகை ஜனனி ஐயர் சென்னையில் தனியார் மருத்துவமனையில் ஒன்றில் தடுப்பூசி போட்டுக் கொண்ட புகைப்படம் ஒன்று வெளியாகி உள்ளது.
Facebook =>Like செய்ய கிளிக் பண்ணுங்க!!