ஜல்லிக்கட்டு மாடுபிடி வீரர்கள் மற்றும் காளைகளின் உரிமையாளர்கள் ஜல்லிக்கட்டு போட்டிகளுக்கு முன்பதிவு செய்ய வேண்டும் என்று மதுரை மாவட்ட ஆட்சியர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் முன்பதிவிற்கான தேதி, வீரர்கள் காளைகளின் உரிமையாளர்கள் பின்பற்ற வேண்டிய நெறிமுறைகள் குறிப்பிடப்பட்டுள்ளன.
பொங்கல் விழாவில் ஜல்லிக்கட்டு:
தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகை இன்னும் சில நாட்களில் வர உள்ளது. இந்த ஆண்டு கொரோனா பரவல் காரணமாக பாரம்பரியமாக நடைபெற்று வரும் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறாதோ என்று அனைவரும் அச்சம் அடைந்தனர். ஆனால், தமிழக அரசு மாட்டு பொங்கல் அன்று பாலமேடு, அலங்காநல்லூர் மற்றும் அவனியாபுரம் ஆகிய இடங்களில் ஜல்லிக்கட்டு நடைபெறும் என்று தெரிவித்துள்ளது. வரும் 14 ஆம் தேதி அவனியபுரத்திலும், 15 ஆம் தேதி பாலமேட்டிலும், 16 ஆம் தேதி அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு நடைபெறும் என்று திட்டமிடப்பட்டுள்ளது.
ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!
இதனை அடுத்து போட்டிகளில் பங்கேற்க இருக்கும் மாடுபிடி வீரர்கள் மற்றும் காளைகளின் உரிமையாளர்கள் வரும் 9 மற்றும் 11 ஆம் தேதி முன்பதிவு செய்ய வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. கொரோனா காலம் என்பதால் வரும் 10 மற்றும் 11 ஆம் தேதி மாடுபிடி வீரர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்த அறிக்கையினை மதுரை மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ளார்.
கேப்டன் கங்குலி மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் – விரைவில் பணிகளை தொடர வாழ்த்தும் ரசிகர்கள்!!
அறிக்கையில் மேலும் கூறப்பட்டு இருப்பதாவது முன்பதிவில் கலந்து கொள்ள இருக்கும் மாடுபிடி வீரர்கள், காளைகளின் உரிமையாளர்கள் மற்றும் உதவியாளர்கள் அனைவரும் தங்களது ஆதார் அட்டை மற்றும் 3 பாஸ்போர்ட் போட்டோக்களை கொண்டு வர வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.