ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக இந்திய அணி 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் முதல் போட்டியை மும்பையில் விளையாடி வருகிறது. இந்த போட்டியில், முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணியில், டிராவிஸ் ஹெட்டை முகமது சிராஜ் போல்டாக்கி அசத்தினார். இதனை தொடர்ந்து, ஸ்டீவ் ஸ்மித் 22 ரன்களில் ஹர்திக் பாண்டியா பந்தில் வெளியேறினார்.
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
இதையடுத்து களமிறங்கிய மார்னஸ் லாபுசாக்னே இந்தியாவின் குல்தீப் யாதவ் பந்தை தூக்கி அடிக்க அதனை ஆல் ரவுண்டரான ஜடேஜா டைவ் செய்து கேட்ச் பிடித்து அசத்தினார். இதனால், மார்னஸ் லாபுசாக்னே 15 ரன்களில் பெவிலியன் திரும்பினார். இந்த போட்டியானது ஜடேஜாவுக்கு சர்வதேச அளவில் 300 வது போட்டியாகும்.
இங்கிலாந்து ஓபன் பேட்மிண்டன்: அரையிறுதி சுற்றுக்குள் நுழைந்த இந்திய மகளிர் ஜோடி!!
இதில், ஒரு கேட்ச் செய்து எதிரணி வீரரை வீழ்த்தியதன் மூலம் ஜடேஜா, தற்போது விளையாடும் வீரர்களில் அதிக (128) கேட்ச்சுகளை பிடித்துள்ள 2வது இந்திய வீரர் என்ற பெருமையை தக்க வைத்துள்ளார். இந்த பட்டியலில் விராட் கோலி 495 இன்னிங்ஸில் 300* கேட்ச்சுகள் பிடித்து முதலிடத்தில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.