இன்று நடந்தது திருமண நிச்சயதார்த்தம் இல்லை – ராணா டகுபதியின் தந்தை பேட்டி..!

0

நடிகர் ராணா டகுபதிக்கு நிச்சயதார்த்தம் நடந்து விட்டதாக வெளியான செய்தி உண்மை இல்லை என அவரது தந்தை சுரேஷ் பாபு தெரிவித்து உள்ளார். மாறாக நிச்சயதார்த்தம் மற்றும் திருமணம் நடைபெறுவதற்கு தேதி குறிப்பதற்காக நடைபெற்ற இரு குடும்ப சந்திப்பு இது என தெரிவித்து உள்ளார்.

பாகுபலி ராணா:

தெலுங்கு திரையுலகில் 2010ம் ஆண்டு லீடர் என்கிற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் ராணா டகுபதி. இவர் தமிழில் இஞ்சி இடுப்பழகி, பெங்களூரு நாட்கள் மற்றும் ஆரம்பம் ஆகிய படங்களிலும் நடித்துள்ளார். இவரது திரை வாழ்க்கையில் பாகுபலி திரைப்படம் தான் புகழின் உச்சிக்கே கொண்டு சென்றது. சிங்கிள் ஆக இருந்த ராணா சில நாட்களுக்கு முன் தன்னுடைய காதலியை உலகிற்கு அறிமுகம் செய்து வைத்தார்.

மிஹீகா பஜாஜின் தனக்கு ஓகே சொல்லி விட்டதாக புகைப்படத்துடன் பதிவிட்டு இருந்தார் ராணா டகுபதி. ஹைதெராபாத்தைச் சேர்ந்த பஜாஜின் டிசைன் ஸ்டூடியோ ஒன்றின் நிறுவனராக உள்ளார். இன்று அவருடன் ஜோடியாக எடுத்த புகைப்படங்களை ராணா வெளியிட்டார். அது இணையத்தில் வைரலாகியது. அவருக்கு நிச்சயதார்த்தம் நடந்து விட்டதாக கூறப்பட்ட நிலையில், நிச்சயதார்த்தம் மற்றும் திருமணம் நடைபெறுவதற்கு தேதி குறிப்பதற்காக நடைபெற்ற இரு குடும்ப சந்திப்பு விழா என அவரது தந்தை தெரிவித்து உள்ளார்.

To Subscribe Youtube Channel Click Here
To Join WhatsApp Group Click Here
To Join Telegram ChannelClick Here

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here