இன்றைய காலகட்டத்தில் பல முன்னணி ஐ.டி. நிறுவனங்களும், தங்களது ஊழியர்களை திடீரென பணி நீக்கம் செய்து வருகின்றனர். இதன் காரணமாக வேலையிழந்த ஊழியர்கள் பலரும் குழந்தை படிப்பு செலவு, மாதாந்திர தவணை உள்ளிட்ட பல்வேறு சிக்கல்களுக்கு உள்ளாகி மிகுந்த மன உளைச்சல் அடைகின்றனர். அப்படி பெங்களூரில் உள்ள டிசிஎஸ் நிறுவனம் அண்மையில் பணியாளர்களை நீக்கம் செய்ததாக கூறப்படுகிறது.
பழைய ஓய்வூதிய திட்டம் மீண்டும் அமலுக்கு வருமா?? மத்திய அமைச்சர் வெளியிட்ட சூப்பர் நியூஸ்!!!
இதனால் விரக்தி அடைந்த ஊழியர் ஒருவர் தான் யார் என காட்டிக் கொள்ளாமல், அந்த அலுவலகத்துக்கு போன் செய்து அலுவலகத்தில் வெடிகுண்டு வைத்திருப்பதாக மிரட்டல் விடுத்துள்ளார். இதையடுத்து ஊழியர்களை அலுவலகத்தில் வெளியேற்றி விட்டு போலீசார் சோதனை செய்தனர். பின்னர் தான் ஹூப்ளியை சேர்ந்த முன்னாள் டி.சி.எஸ். ஊழியர் பொய் மிரட்டல் விடுத்தது தெரிய வந்தது. தற்போது அந்த நபரை போலீசார் தேடி வருகின்றனர்.