இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து தொடரின் 10 வது சீசன் 12 அணிகளுக்கு இடையே நடைபெற்று வருகிறது. இந்த தொடரில், நேற்று பலம் வாய்ந்த மும்பை சிட்டி அணியானது, பெங்களூரு அணியை எதிர்த்து போட்டியிட்டது. இதில், மும்பை சிட்டி அணியின் அப்தனாசர் எல் கயாதி 11வது நிமிடத்திலேயே கோல் அடித்து அசத்தினார். இதனை தொடர்ந்து, முழு ஆதிக்கத்தையும் செலுத்த தொடங்கிய மும்பை அணியில், ஆகாஷ் 30 வது நிமிடத்தில் கோலை பதிவு செய்தார்.
இதனால், மும்பை சிட்டி அணியானது, ஆட்டத்தின் முதல் பாதியிலேயே 2-0 என்ற கோல் கணக்கில் அசைக்க முடியாத முன்னிலை பெற்றனர். இதையடுத்து தொடங்கப்பட்ட, 2வது பாதியில், மும்பை அணியின் ஜார்ஜ் பெரேரா தியாஸ் மற்றும் லல்லியன்சுவாலா ஆகியோர், 57 வது மற்றும் 61 வது நிமிடங்களில் அடுத்தடுத்து கோல் அடித்தனர். இதனால், ஆட்ட நேர முடிவில் மும்பை சிட்டி அணியானது 4-0 என்ற கோல் கணக்கில் அபாரமாக வெற்றி பெற்றது.
Enewz Tamil WhatsApp Channel
அடக்கடவுளே.. மாரடைப்பால் உயிரிழந்த 24 வயது பிரபல இளம் நடிகை.., சோகத்தில் மூழ்கிய திரையுலகம்!!