உலகப்புகழ் பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் திருக்கோயிலில் ஆண்டுதோறும் பல்வேறு விழாக்கள் கொண்டாடப்பட்டு வருகிறது. இக்கோவிலுக்கு விழாக்காலம் மட்டுமல்லாமல் அனுதினமும் பக்தர்கள் கூட்டம் தரிசனத்திற்கு வந்த வண்ணம் உள்ளனர். இந்த நிலையில் வருகிற டிசம்பர் 17ஆம் தேதி முதல் மார்கழி மாதம் பிறக்க உள்ளதால், தனுர் மாத திருப்பள்ளியெழுச்சி பூஜை டிச.,17 முதல் 2024 ஜன.,14 வரை நடைபெற உள்ளதாக கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இதன் காரணமாக இந்த நாட்களில் அதிகாலை 03.30 மணிக்கு வெளி கோபுர கதவுகள் திறக்கப்பட்டு மதியம் 12.00 மணிக்கு உச்சிகால பூஜையை முடித்து நடை சாத்தப்படும். பின்னர் மாலை 04.00 மணியளவில் நடை திறக்கப்பட்டு இரவு 09.30 மணி வரை தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட இருப்பதாக கூறியுள்ளனர்.