தற்போது டிஜிட்டல் உலகத்தில் மாரடைப்பால் இறக்கும் இளைஞர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே தான் இருக்கிறது. குறிப்பாக 25 வயதுக்குள் இருப்பவர்களுக்கு தான் அதிகம் மாரடைப்பு ஏற்படுவதாக ஒரு அறிக்கை சொல்கிறது. இந்நிலையில் மலையாள இளம் நடிகை மாரடைப்பால் இறந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அதாவது மலையாளத்தில் வெளியான காக்கா திரைப்படத்தில் ‘பஞ்சமி’ கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் தான் லக்ஷ்மிகா. இதனை தொடர்ந்து உயரே, சவுதி வெள்ளக்கா, பஞ்சவர்ண தாத்தா, ஒரு யமதன் பிரேமகதா தொடர்ந்து வெற்றி படங்களில் நடித்திருந்தார். இந்நிலையில் வெறும் 24 வயதே ஆகும் லக்ஷ்மிகா மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியது. சினிமா பிரபலங்கள் பலரும் தங்களது இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.