ஐ.எஸ்.எல் கால்பந்து போட்டி – 4வது வெற்றி பெறுமா சென்னை அணி??

0

தற்போது கால்பந்தாட்ட தொடரான ஐ.எஸ்.எல் நடைபெற்று வருகிறது. பல தோல்விகளை சந்தித்து வந்த சென்னை எப்.சி அணி இன்று நடக்கவுள்ள போட்டியில் தனது 4வது வெற்றியை பதிவு செய்யுமா?? என்று ரசிகர்கள் எதிர்பார்த்து வருகின்றனர்.

ஐ.எஸ்.எல்:

தற்போது 7 வது ஐ.எஸ்.எல் கால்பந்து தொடர் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் மொத்தம் 11 அணிகள் பங்கேற்கும். ஒவ்வொரு அணியும் மற்ற அணியுடன் தலா இரண்டு முறை மோதும்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

லீக் சுற்றின் முடிவில் முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் அணிகள் அரை இறுதிக்கு முன்னேறும். இன்றைய போட்டியில் சென்னை அணி விளையாட உள்ளது. இந்த தொடரில் சென்னை அணி வெறும் 3 வெற்றிகளை மட்டுமே பதிவு செய்துள்ளது.

சென்னை மற்றும் பெங்கால் பலப்பரீட்சை:

இதுவரை சென்னை அணி விளையாடிய 11 போட்டிகளில் 3ல் வெற்றி, 5ல் டிரா மற்றும் 3ல் தோல்வி அடைந்து புள்ளிப்பட்டியலில் 14 புள்ளிகளை பெற்று 6வது இடத்தில் உள்ளது. அதேபோல் பெங்கால் புள்ளி பட்டியலில் 11 புள்ளிகளை பெற்று 9வது இடத்தில் உள்ளது. இந்த அணி இதுவரை விளையாடிய 11 போட்டிகளில் 2ல் வெற்றி, 5 டிரா மற்றும் 4 தோல்வியை தழுவியுள்ளது.

நந்திகிராம் தொகுதியிலிருந்து போட்டியிடுவேன் – மம்தா பானர்ஜீ அறிவிப்பு!!

தற்போது தனது 4வது வெற்றியை பதிவு செய்ய சென்னை அணியும், 3 வது வெற்றியை பதிவு செய்ய ஈஸ்ட் பெங்கால் அணியும் பலப்பரீட்சை நடத்தவுள்ளது. இந்த போட்டி இன்று இரவு 7.30 மணிக்கு தொடங்கவுள்ளது. ஏற்கனவே இரு அணிகள் மோதிய போட்டி டிராவில் முடிந்தது. தற்போது புள்ளிப்பட்டியலில் மும்பை அணி 26 புள்ளிகளுடன் முதல் இடத்தில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here