10வது இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இதில் நேற்று நடைபெற்ற போட்டியில் கேரளா பிளாஸ்டர்ஸ் மற்றும் கோவா அணிகள் மோதின. அதன்படி ஆட்டத்தின் 7வது மற்றும் 17வது நிமிடங்களில் கோவா அணியின் ரோலின், முகமது தலா ஒரு கோல் அடித்தனர்.
தமிழக அரசுப் பள்ளி ஆசிரியர்களே., ஜாதிவாரியான கணக்கெடுப்பு பணி., பள்ளிக்கல்வித்துறை அதிரடி!!!
இதன் விளைவாக முதல் பாதி முடிவில் 2-0 என்ற கணக்கில் கோவா அணி முன்னிலையில் இருந்தது. இதனை தொடர்ந்து நடைபெற்ற இரண்டாவது பாதியில் ஆட்டத்தின் 81வது மற்றும் 84வது நிமிடங்களில் கேரளா வீரர் டிமிட்ரியோஸ் 2 கோல்களை பதிவு செய்தார். இவரைத் தொடர்ந்து அதே அணியின் டெய்சுகே மற்றும் ஃபெடோர் தலா 1 கோல் அடித்தனர். இறுதியில் கேரளா அணி 4-2 என்ற கோல் கணக்கில் கோவா அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது.