தமிழகத்தில் ஒரு சில பள்ளிகளில் ஆசிரியர்கள், மாணவர்கள் இடையே ஜாதி ரீதியான பாகுபாடு ஏற்படுவதாக புகார் வெளிவந்தது. இதையடுத்து இது போன்ற குற்ற செயல் நடைபெறாமல் தடுக்க ஓய்வு பெற்ற நீதிபதி சந்துரு தலைமையில் ஆய்வு கமிட்டியை தமிழக அரசு அண்மையில் அமைத்தது. இதைத்தொடர்ந்து ஜாதி பாகுபாட்டை தவிர்க்க, முக்கிய நடவடிக்கை பள்ளிக்கல்வித்துறை மேற்கொண்டு வருகிறது.
WPL 2024 : ஹர்மன்பிரீத் கவுர் அதிரடி.. 5 விக்கெட் வித்தியாசத்தில் மும்பை அபார வெற்றி!!
இது தொடர்பாக கல்வித்துறை அதிகாரிகள் கூறுகையில், “அரசு பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள், ஒரே பகுதி ஒரே ஜாதி என மாணவர்களிடம் பாகுபாடு காட்டுகிறார்களா?, எவ்வளவு காலம் பணியாற்றுகின்றனர்?, ஜாதி ரீதியான குழுவாக செயல்பட்டு வருகிறார்களா? உள்ளிட்ட பல்வேறு விவரங்களை சேகரித்து வருகிறோம்.” என தெரிவித்துள்ளார்.