இந்தியாவில் பெண்கள், முதியவர்கள் உட்பட பலரும் தொலைதூர பயணங்களுக்கு ரயில் பயணங்களையே அதிகம் விரும்புகின்றனர். இதற்கேற்ப பயணிகளுக்கு பல்வேறு வசதிகளை அவ்வப்போது ரயில்வே நிர்வாகம் ஏற்பாடு செய்த வண்ணம் உள்ளது. அந்த வகையில் அவசரமாக டிக்கெட் முன்பதிவு செய்ய வேண்டும் என பலரும் பல்வேறு விதமான விருப்பங்களை தேர்ந்தெடுக்க மறந்துவிடுகிறார்கள்.
இதனை கருத்தில் கொண்டு டிக்கெட் முன்பதிவு செய்த பிறகும் கூட, சூடான உணவு வேண்டும் என்றால் IRCTC ஆப்பில் தேர்வு செய்யலாம். அதேபோல் முன்பதிவு டிக்கெட்டை திருத்துவதற்கான விருப்பமும், தற்போது IRCTC ஆப்-பில் கிடைக்கும் என ரயில்வே நிர்வாக அதிகாரிகள் அறிவுறுத்தி உள்ளனர்.