இனி ரக்ஷிதா வேணாம்., வேற வாழ்க்கையை பாத்துக்கிறேன்., பிக்பாஸுக்கு பிறகு தினேஷ் சொன்ன ஷாக்கிங் அப்டேட் இதோ!!

0

விஜய் டிவியில் ஒளிபரப்பான ”சரவணன் மீனாட்சி” சீரியலில் ஹீரோயினாக நடித்து பிரபலமானவர் தான் ரக்ஷிதா மகாலட்சுமி. இவர் சீரியல் நடிகர் தினேஷ் என்பவரை காதல் திருமணம் செய்து கொண்டார். இதை தொடர்ந்து  சீரியல்களில் ஜோடியாக நடித்து வந்த இவர்கள் கடந்த சில வருடங்களாக பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். இந்நிலையில் ரக்ஷிதாவின் கணவர் தினேஷ் பிக் பாஸ் சீசனில் போட்டியாளராக பங்கேற்று இருந்தார்.  மேலும் அப்போது இந்த சீசனின் டைட்டிலை நான் வின் செய்து அதை தனது மனைவியுடன் கொண்டாடுவேன் என கூறியிருந்தார்.

ஆனால் ரக்ஷிதாவோ தனது இன்ஸ்டா பக்கத்தில் தொடர்ந்து தினேஷ்க்கு எதிராக தனது பதிவை போட்டு வருகிறார்.  இப்படி இருக்கையில் தினேஷ் பிக் பாஸ் ஷோவிற்குப் பிறகு முதன் முறையாக  ரக்ஷிதா  பற்றி ஓபனாக பேசியுள்ளார். அதாவது ரக்ஷிதா மனம் மாறுவார் என்ற நம்பிக்கை எனக்கு போய்விட்டது. மேலும் அவர் ஒரு சுவற்றை எழுப்பி அதற்குள்ளேயே இருந்து கொண்டிருக்கிறார். அதை உடைக்க என்னால் முடியாது. மேலும் இனி அவருக்காக காத்திருப்பதை விட அடுத்த வாழ்க்கையை  நோக்கி பயணிக்க போகிறேன் என தன் ரசிகர்களுக்கு அப்டேட் கொடுத்துள்ளார்.

Enewz Tamil WhatsApp Channel 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here