IPL தொடரின் 30 வது லீக் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் மோதின. இப்போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய ஹைதராபாத் அணி 3 விக்கெட் இழப்பிற்கு 287 ரன்களை குவித்தது. இதில் அதிகபட்சமாக ஹென்ரிச் கிளாசென் 41 பந்துகளில் (41 ரன்கள்) சதம் அடித்து மிரட்டினார்.
இதையடுத்து, 288 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி களம் இறங்கிய RCB அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 262 ரன்கள் மட்டுமே குவித்தது. அதிகபட்சமாக தினேஷ் கார்த்திக் 83 ரன்களுக்கும், ஃபாஃப் டு பிளெசிஸ் 62 ரன்களுக்கும் ஆட்டம் இழந்தனர். இதன் மூலம் 25 ரன்கள் வித்தியாசத்தில் ஹைதராபாத் அணி அபார வெற்றி பெற்றது.