IPL தொடரின் 17வது சீசன் கடந்த மார்ச் 22ம் தேதி முதல் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் நேற்று நடைபெற்ற லீக் போட்டியில் பஞ்சாப் அணியை எதிர்த்து பெங்களூர் விளையாடியது. இப்போட்டியில் டாஸ் வென்ற RCB கேப்டன் டுப்ளசி பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி, முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் பேட்ஸ்மேன்கள், தொடக்கத்தில் தடுமறினாலும் இறுதி கட்டத்தில் அதிரடியாக விளையாடி அசத்தினர். இதன் விளைவாக 20 ஓவரில் 6 விக்கெட் இழப்பிற்கு 176 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக தவான் 45 ரன்கள் எடுத்தார்.
இதையடுத்து, 177 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி RCB அணி களமிறங்கியது. இதில் தொடக்க வீரர்களாக களம் இறங்கிய டூப்ளிசஸ் மற்றும் விராட் கோலி இன்னிங்ஸ் இன் தொடக்கம் முதலே பொறுப்பாக விளையாடிய அணியின் ஸ்கோரை உயர்த்தினர். தொடர்ந்து அதிரடியில் ஈடுபட்ட விராட் கோலி 49 பந்துகளில் 11 பவுண்டரி, 2 சிக்ஸர்கள் உட்பட 77 ரன்கள் விளாசினார். இவரின் சிறந்த ஆட்டத்தின் மூலம் பெங்களூர் அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
Enewz Tamil WhatsApp Channel
தமிழக இல்லத்தரசிகளே…, மீண்டும் உயரும் காய்கறிகளின் விலை…, எவ்வளவு தெரியுமா??