எதிர்வரும் இந்தியன் பிரீமியர் லீக் தொடரின் 17 வது சீசன் வரும் மார்ச் 24 ஆம் தேதி முதல் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கான எதிர்பார்ப்பு இந்திய ரசிகர்களுக்கு இடையே நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. ரசிகர்களின் எதிர்பார்ப்பை மேலும், அதிகரிக்கும் வகையில், ஐபிஎல் குறித்த அப்டேட்டும் வெளியாகி வந்த வண்ணம் உள்ளது. இந்த வகையில், இதுவரை நடைபெற்றுள்ள ஐபிஎல் தொடர்களில் அதிக (5) முறை சாம்பியன் பட்டம் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணியானது அப்டேட் ஒன்றை வெளியிட்டுள்ளது.
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
அதாவது, எதிர்வரும் சீசனுக்கான தங்களது புதிய ஜெர்சியை அணி நிர்வாகம் தற்போது அறிமுகப்படுத்தி உள்ளது. இந்த ஜெர்சியானது, CSK அணியின் ஸ்பான்சர்ஷிப் ETHINAD AIRWAYS பெயருடன் வழங்கமான மஞ்சள் நிறத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை, சென்னை அணி தங்களது அதிகாரபூர்வமான இன்ஸ்டாகிராம் பக்கத்தில், தீபக் சாகர், ராகேஷ் மற்றும் முகேஷ் ஆகியோர் புதிய ஜெர்சி அணிந்து சிரிப்பது போன்ற போட்டோவை வெளியிட்டுள்ளது.