தமிழக முழுவதும் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் 10, 11, 12 ஆம் வகுப்பு மாணவ, மாணவிகளுக்கு வரும் மார்ச், ஏப்ரல் மாதங்களில் பொதுத் தேர்வுகள் துவங்க உள்ளது. இதனால் இந்த தேர்வில் எந்த ஒரு குளறுபடிகளும் ஏற்படக் கூடாது என்பதற்காக அந்தந்த மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். சமீபத்தில் கூட தேர்வு அறை கண்காணிப்பாளர்களுக்கான நெறிமுறைகளை அரசு தேர்வுகள் இயக்ககம் வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
இந்நிலையில் தேர்வு துறை முக்கிய உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது. அதாவது 12 ஆம் வகுப்புக்கான செய்முறை தேர்வுகளை பிப்ரவரி 12 முதல் 17 ஆம் தேதி வரையும், 11 ஆம் வகுப்புக்கான செய்முறை தேர்வு 19ஆம் தேதி முதல் 24 ஆம் தேதி வரையும், 10ம் வகுப்புக்கான செய்முறை தேர்வு மார்ச் இறுதி வாரத்திற்குள் நடத்தி முடிக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளனர்.