நடப்பு ஆண்டிற்கான இந்தியன் ப்ரீமியர் லீக் (IPL) தொடர் போட்டிகள் கடந்த 2 நாட்களுக்கு முன்னர் முடிவு பெற்றது. அந்த வகையில், புள்ளிப்பட்டியலில் முதல் நான்கு இடங்களைப் பிடித்திருந்த குஜராத் டைட்டன்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ், லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் பிளே ஆப் சுற்றுக்கு நுழைந்தது.
இப்போது, பிளே ஆப் சுற்றுக்கான முதல் போட்டி இன்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் வைத்து நடைபெற்று வருகிறது. இந்த ஆட்டத்தில் குஜராத் அணி சென்னை அணியுடன் மோதுகிறது. அந்த வகையில், இன்றைய போட்டிக்கான டாஸ் வென்ற குஜராத் அணி பவுலிங் செய்வதாக அறிவித்தது.
தமிழகத்தில் இந்த மாவட்ட அமைச்சர்கள் பணியிட மாற்றம்., அரசு அதிரடி அறிவிப்பு!!!
இதைத் தொடர்ந்து களமிறங்கிய சென்னை அணி 3 ஓவர் முடிவில் 23 ரன்களை எடுத்து நல்ல நிலையில் விளையாடி வருகிறது. இந்த ஆட்டத்தில் வெல்லும் அணி நேரடியாக இறுதிப் போட்டிக்குள் நுழையும் என்பது குறிப்பிடத்தக்கது.