ஐபிஎல் தொடரில், நடப்பு சாம்பியன் அணியான குஜராத் டைட்டன்ஸ் அணி, 55 ரன்கள் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியை வீழ்த்தி அசத்தி உள்ளது.
ஐபிஎல்:
நடப்பு இந்தியன் சூப்பர் லீக் தொடரின், 35 வது போட்டியில், குஜராத் டைட்டன்ஸ் (GT), அணியை எதிர்த்து மும்பை இந்தியன்ஸ் (MI) விளையாடியது. இந்த போட்டியில், டாஸ் வென்ற மும்பை அணியின் கேப்டன் ரோஹித் சர்மா பவுலிங்கை தேர்வு செய்தார். இதையடுத்து குஜராத் அணியின் தொடக்க வீரர்களாக விருத்திமான் சாஹா மற்றும் சுப்மன் கில் களமிறங்கினர்.
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இதில், விருத்திமான் சாஹா, 7 ரன்கள் இருக்கும்போது, அர்ஜுன் டெண்டுல்கர் பந்தில் தனது விக்கெட்டை பறிகொடுத்தார். ஆனால், சுப்மன் கில்லோ அதிரடியாக விளையாடி அரைசதம் கடந்தார். இவர், 56 ரன்களில் வெளியேற, ஹர்திக் பாண்டியா 13, விஜய் ஷங்கர் 19, டேவிட் மில்லர் 46, அபினவ் மனோகர் 42 என சீரான இடைவெளியில் தங்களது விக்கெட்டை இழக்க, குஜராத் அணி 20 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 207 ரன்களை குவித்திருந்தது.
இதையடுத்து, 208 ரன்களை துரத்த களமிறங்கிய மும்பை இந்தியன்ஸ் அணி வீரர்கள், குஜராத் அணியின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல், 20 ஓவரில் 9 விக்கெட் இழப்புக்கு 152 ரன்களை மட்டுமே எடுத்து, 55 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவி உள்ளது. இதில், அதிகபட்சமாக, நூர் அஹ்மத் 3, மோஹித் சர்மா மற்றும் ரஷீத் கான் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றி இருந்தனர்.