2021 ஐபிஎல் போட்டியில் சிஎஸ்கே அணி விடுவிக்கும் வீரர்கள் – கசிந்த பெயர் பட்டியல்!!

0

வரும் 2021 ஏப்ரல் மாதத்தில் இந்தியாவில் ஐபிஎல் போட்டிகளை நடத்த பிசிசிஐ திட்டமிட்டுள்ளனர். மேலும் இந்த போட்டிக்கான ஆக்சன் வரும் பிப்ரவரி மாதம் நடைபெறும் என்றும் தெரிவித்துள்ளனர். இந்த ஆண்டு சிஎஸ்கே அணி விடுவிக்கும் வீரர்களின் பெயர்களின் பட்டியல் தற்போது வெளியாகியுள்ளது.

2021 ஐபிஎல் போட்டி:

இந்தியாவில் ஆண்டுதோறும் புகழ்மிக்க ஐபிஎல் போட்டிகள் நடந்து வருகின்றது. கடந்த ஆண்டு கொரோனா பரவல் காரணமாக பிசிசிஐ ஐபிஎல் போட்டியை ஐக்கிய அரபில் வைத்து நடத்தியது. தற்போது இந்த ஆண்டுக்கான ஐபிஎல் தொடர் வரும் ஏப்ரல் மாதத்தில் இந்தியாவில் வைத்து நடத்த திட்டமிட்டுள்ளனர். மேலும் வரும் பிப்ரவரி மாதத்தில் வீரர்களை ஏலத்தில் எடுக்கும் நிகழ்வு தொடங்கவுள்ளது. வரும் ஜனவரி மாதம் 21ம் தேதி முதல் தேவையில்லாத வீரர்களை அந்தந்த அணிகள் விடுவிக்குமாறு பிசிசிஐ தெரிவித்துள்ளது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

இதற்கு வெறும் 3 நாட்களே இருக்கும் நிலையில் சிஎஸ்கே அணி விடுவிக்க போகும் வீரர்களின் பெயர் பட்டியல் தற்போது கசிந்துள்ளது. மேலும் தற்போது சிஎஸ்கே அணியிடம் இருப்பு தொகையாக வெறும் 11 லட்சம் ரூபாய் உள்ளது. ஓர் வீரரை ஏலத்தில் எடுப்பதற்கு குறைந்தது 20 லட்சம் ரூபாய் தேவைப்படும். இதற்காக பல முக்கியமான வீரர்களை விடுவித்துள்ளது சிஎஸ்கே அணி. மேலும் மும்பை மற்றும் டெல்லி அணிகளில் எந்த மாற்றமும் இருக்காது என்று தெரிகிறது.

கசிந்த பெயர் பட்டியல்:

தற்போது சாவ்லா (6.5 கோடி), கரண் சர்மா (5 கோடி), ஜாதவ் (7.8 கோடி) ரூபாய்க்கு வெளியிடப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன்மூலம் சிஎஸ்கே அணியிடம் இருப்பு தொகையாக 20 கோடிக்கு மேல் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

8 வயதில் 13 கிமீ கடந்து இடைநில்லா ஓட்டம் – சேலம் சிறுமி உலக சாதனை!!

இதனால் சிஎஸ்கே அணி புதிய வீரர்களை ஏலத்தில் எடுக்கும் வாய்ப்பு உள்ளது. அதேபோல் ஹர்பஜனையும் விடுவிக்க அதிக வாய்ப்புள்ளதாக தெரிகிறது. மேலும் சிஎஸ்கே அணியில் தோனி, ஜடேஜா, ராயுடு, டு பிளஸ்ஸிஸ், தீபக் சாகர், தாக்கூர், சாம் கரண் மற்றும் ருத்துராஜ் கெய்க்வாட் இடம் பெறுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here