தலைநகரில் பள்ளிகள் திறப்பு – மாணவர்களின் குறைவான வருகையால் கல்வி நிர்வாகங்கள் அதிர்ச்சி!!

0

இந்தியாவின் தலைநகரான டெல்லியில் இன்று பள்ளிகள் திறக்கப்பட்டது. ஆனால், கொரோனா பரவல் அச்சம் காரணமாக மாணவர்களின் வருகை ஏக அளவில் குறைந்துள்ளது. இதனால் பள்ளி நிர்வாகத்தினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

பள்ளிகள் திறப்பு:

கொரோனா பரவல் அச்சம் காரணமாக பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டன. இதனால் மாணவர்கள் அனைவரும் ஆன்லைன் வாயிலாக தான் பாடங்களை கற்று வந்தனர். நடப்பு கல்வி ஆண்டு துவங்கி 8 மாதங்கள் முடிவுற்ற நிலையிலும், பள்ளிகள் திறக்கப்படவில்லை. மத்திய அரசு மாணவர்களின் கல்வி நலன் கருதி கடந்த அக்டோபர் மாதம் பள்ளிகளை திறக்க அனுமதி வழங்கியது.

ஜனவரி 27 சசிகலா, பிப்ரவரி 5 இளவரசி – சிறையில் இருந்து ‘ரிலீஸ்’!!

மத்திய அரசு வெளியிட்ட அரசாணையில் அந்தந்த மாநில அரசுகள் தங்கள் மாநிலங்களில் நிலவும் சூழலை கருத்தில் கொண்டு பள்ளிகள் திறப்பு குறித்து முடிவினை எடுக்கலாம் என்று தெரிவிருந்தது. இதனை அடுத்து பல மாநிலங்கள் கொரோனா பரவல் அச்சம் காரணமாக பள்ளி மற்றும் கல்லூரிகளை திறக்க தயக்கம் காட்டியது. அதே போல் தான் டெல்லி மாநில அரசும் அதிகபட்சமான கொரோனா பரவல் காரணமாக பள்ளிகள் திறப்பினை தள்ளி வைத்து வந்தது.

மாணவர்கள் வருகை குறைவு:

ஆனால், மாணவர்களின் கல்வி நலன் கருதியும், அவர்களை வரும் இறுதி தேர்வுகளுக்கு தயார்படுத்தும் நோக்கிலும், பள்ளிகள் திறக்க முடிவு எடுக்கபட்டது. இதனை அடுத்து பள்ளிக்கு வரும் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் எந்த மாதிரியான நெறிமுறைகளை பின்பற்ற வேண்டும் என்பது குறித்தும் விளக்கப்பட்டது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

இன்று பள்ளிகள் திறக்கப்பட்ட நிலையில், எதிர்பார்த்த அளவினை விட மாணவர்களின் வருகை மிகவும் குறைந்து இருந்தாக தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன. டெல்லியில் தற்போது பரவி வரும் புதிய வகை கொரோனா பரவல் காரணமாக பெற்றோர்கள் தங்களது குழந்தைகளை பள்ளிகளுக்கு அனுப்பவில்லை என்றும் கூறப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here