மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு – ஜூலை மாதம் முதல் அமல்!!

0

கடந்த ஆண்டு முதல் நிறுத்திவைக்கப்பட்டிருந்த அகவிலைப்படி இந்த ஆண்டு ஜூலை மாதம் முதல் வழங்கப்படும் என்ற தகவல் வெளியாகியுள்ளது. இதனால் அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் குஷி அடைந்துள்ளனர்.

அகவிலைப்படி

கடந்த ஆண்டு கொரோனா காலம் என்பதால் அனைத்து துறைகளும் முடங்கின. இதனால் நாட்டின் பொருளாதாரமே வீழ்ச்சி அடைந்தது. மேலும் நாட்டின் பொருளாதாரத்தை சரி செய்வதற்கு மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை கையில் எடுத்தது. அதில் ஒன்று தான் அகவிலைப்படி. கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் வழங்கவிருந்த 4 சதவீத அகவிலைப்படி உயர்வை மத்திய அரசு அதிரடியாக நிறுத்தியது. இதனால் அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் கவலை அடைந்தனர்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

தற்போது இந்தியாவில் அனைத்து துறைகளும் இயங்கி சிறப்பான முறையில் வர்த்தகம் நடைபெற்று வருகிறது. மேலும் நாட்டின் பொருளாதாரமும் சற்று உயர தொடங்கியுள்ளது. இந்நிலையில் அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் மகிழ்ச்சி அடையும் வகையில் ஓர் செய்தி வெளியாகியுள்ளது. இதனை மத்திய நிதித்துறை இணை அமைச்சரான அனுராக் தாகூர் தெரிவித்துள்ளார்.

‘உலகில் மூன்றில் ஒரு பெண் பாலியல் கொடுமைக்கு ஆளாகிறார்’ – உலக சுகாதார மையம் அதிர்ச்சி தகவல்!!

அதன்படி அவர் கூறியதாவது, வருகிற ஜூலை மாதம் 1ம் தேதி முதல் அகவிலைப்படி நிலுவை பணம் அனைத்தும் வழங்கப்படும் என்று தெரிவித்தார். அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு இதுவரை மூன்று தவணை நிலுவையில் உள்ளது. கடந்த ஆண்டு முதல் அகவிலைப்படி உயர்வை மத்திய அரசு நிறுத்தியதால் அரசுக்கு சுமார் ரூ.37,530 கோடி ரூபாய் மிச்சமாகியுள்ளதாம். தற்போது அகவிலைப்படி உயர்வு தவணை பணம் கிடைக்கவுள்ளதால் அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here