முன்னாள் அமைச்சர் மணிகண்டனை ஜூன் 9 வரை கைது செய்ய தடை..உயர் நீதிமன்றம் பரபரப்பு உத்தரவு!!!

0

முன்னாள் அமைச்சர் மணிகண்டன் நடிகையை பாலியல் வன்கொடுமை செய்து ஏமாற்றிய வழக்கில் அவரை கைது செய்ய சென்னை உயர் நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது.

ENEWZ  WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

நடிகை சாந்தினி என்பவர் அதிமுக ஆட்சியில் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சராக இருந்த மணிகண்டன் மீது, தன்னை திருமணம் செய்து கொள்வதாக கூறி ஏமாற்றியதகவும், 3 முறை கட்டாயப்படுத்தி கருவைக் கலைக்கச் செய்ததுடன், தற்போது திருமணம் செய்ய மறுப்பதுடன், அவருடன் இருந்தபோது எடுத்த புகைப்படங்களை சமூக ஊடகங்களில் வெளியிட்டு விடுவதாக கூறி மிரட்டுவதாகவும் புகார் அளித்திருந்தார்.

இதற்கு முன்னாள் அமைச்சர் மணிகண்டன் தாங்கள் கணவன்-மனைவியாக வாழவில்லை என்றும், கொடுத்த கடனை திரும்ப கேட்டதால் அவர் தன்  மீது பொய்யாக புகார் கொடுத்துள்ளார் என்பதால் தனக்கு முன்ஜாமீன் வழங்க வேண்டும் என்று நேற்று சென்னை ஐகோர்ட்டில் முன்னாள் அமைச்சர் மணிகண்டன் மனு தாக்கல் செய்திருந்தார்.

இதையடுத்து சென்னை உயர்நிதிமன்றத்தில் மணிகண்டனின் முன் ஜாமீன் வழக்கு விசாரணைக்கு வந்தது. இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் முன்னாள் அமைச்சர் மணிகண்டனை வருகிற 9-ந்தேதி வரை கைது செய்ய இடைக்கால தடை விதித்துள்ளனர்.

Facebook   => Like செய்ய கிளிக் பண்ணுங்க!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here